Published : 30 Jun 2017 07:40 PM
Last Updated : 30 Jun 2017 07:40 PM
'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகவில்லை என தெரிவித்தார்கள்.
சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநகரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'மாநகரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தையும் எஸ்.ஆர்.பிரபுவே தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து விசாரித்த போது, "திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள். ஆனால், இதில் கார்த்தி நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. முழுமையாக திரைக்கதை முடிவானவுடன் தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்கள்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT