கவுரவ கதாபாத்திரத்துக்கு சம்பளம் வாங்க மறுத்த தனுஷ்

கவுரவ கதாபாத்திரத்துக்கு சம்பளம் வாங்க மறுத்த தனுஷ்
Updated on
1 min read

இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் 'நிம்மோ' படத்தின் கவுரவ பாத்திரத்துக்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை நிராகரித்து விட்டார் தனுஷ்.

இந்தி திரையுலகில் தனுஷை 'ராஞ்சனா' (RAANJHANAA) படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார் தனுஷ்.

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார் தனுஷ். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் 'நிம்மோ' என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

கவுரவ வேடத்தில் நடித்ததற்காக ஆனந்த் எல்.ராய் சம்பளம் கொடுக்க, அதை மறுத்து, வேண்டாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இச்செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் ஆனந்த் எல்.ராய்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in