அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் செப்டம்பருக்கு மாற்றம்!

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் செப்டம்பருக்கு மாற்றம்!
Updated on
1 min read

ஆகஸ்ட் மாத வெளியீட்டுக்கு தயாராகி வந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம், செப்டம்பர் வெளியீட்டுக்கு மாற்றி இருக்கிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஒன்றாக என்டர்டெயின்மன்ட்' நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு விளம்பரப்படுத்தி வந்தது. கெளதம் மேனன் - சிம்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது முடிவுற்று இருக்கிறது.

தற்போது 'அச்சம் என்பது மடமையடா' டப்பிங் பணிகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பில் பங்கேற்க உறுதியளித்திருக்கிறார்.

இப்பணிகளை முடித்து ஆகஸ்ட் மாதத்தில் அவசரமாக வெளியிட வேண்டாம். செப்டம்பரில் வெளியிடலாம் என படக்குழு தீர்மானித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in