

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் 'கவலை வேண்டாம்' திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
டிகே இயக்கத்தில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி, சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கவலை வேண்டாம்'. லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
முதலில் இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டு. கீர்த்தி சுரேஷ் விலகவே அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இப்படம் அக்டோபர் 7-ம் தேதி தசரா விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
அக்டோபர் 7-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் வரும் 'ரெமோ' படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.