ஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே: சங்கமித்ரா தயாரிப்பு நிறுவனம்

ஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே: சங்கமித்ரா தயாரிப்பு நிறுவனம்
Updated on
1 min read

ஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே என்று 'சங்கமித்ரா' தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியிருப்பதுதான் தமிழ் திரையுலகின் முக்கிய செய்தியாக இருக்கிறது. விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் விடுத்த அறிக்கையில், "துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார்.

இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.ஆனால், முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்" என்று தெரிவித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கையைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர்கள் குழுவின் சார்பில் அறிக்கை என்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ட்விட்டை தவிர இயக்குநர் சுந்தர் சி, தயாரிப்பு நிறுவனம் என யாரும் ஸ்ருதிஹாசன் நடிக்காததைப் பற்றி வேறெதுவும் கூறுவில்லை. இது பற்றி ஊடகங்களின் வரும் மற்ற கருத்துகள் அனைத்தும் புரளியே, ஆதாரமற்றவையே" என்று தெரிவித்துள்ளார்கள்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். கலை இயக்குநராக சாபுசிரில், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக திரு பணியாற்றவுள்ளார்.

தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்றும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in