வால்டர் படப்பூஜை: படக்குழுவினருக்கு சிங்காரவேலன் எச்சரிக்கை; தொடங்கியது சர்ச்சை

வால்டர் படப்பூஜை: படக்குழுவினருக்கு சிங்காரவேலன் எச்சரிக்கை; தொடங்கியது சர்ச்சை
Updated on
1 min read

'வால்டர்' படப்பூஜை நடந்த நிலையில், படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள 'வால்டர்' படத்தின் பூஜை நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இந்தப் படத்தை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பூஜை புகைப்படங்கள் மற்றும் படக்குழுவினர் சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

இந்நிலையில், நேற்று (ஜூன் 14) மாலையிலேயே 'வால்டர்' படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

இது தொடர்பாக “ 'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்சினை?

'கழுகு 2' படத்தைத் தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் திட்டமிடப்பட்ட படம் 'வால்டர்'. இதன் லோகோ வடிவமைப்புடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தையும் அன்பரசனே இயக்கவிருந்தார். இதில் விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அர்ஜுன், விக்ரம் பிரபு இருவருடன் இயக்குநர் அன்பரசன் மற்றும் சிங்காரவேலன் சந்தித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் இயக்குநர் அன்பரசன் இதே கதையை வேறொரு தயாரிப்பாளரிடம் கூறி படப்பூஜை நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தான் சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in