ஜிகர்தண்டா 50-வது நாள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனை

ஜிகர்தண்டா 50-வது நாள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனை
Updated on
1 min read

'ஜிகர்தண்டா' படத்தின் 50-வது நாளுக்கு ஒரு பேப்பர் விளம்பரம்கூட இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சித்தார்த், சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகர்தண்டா', கதிரேசன் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

'ஜிகர்தண்டா' மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிம்ஹா நடிப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று 'ஜிகர்தண்டா' வெளியாகி 50 நாள் ஆகிறது. இதற்கு ஒரு பேப்பர் விளம்பரம் கூட இல்லை என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

"50 போட்டதுக்கு ஊர் முழுவதும் ப்ளக்ஸ் ஏற்றியிருந்திருக்கலாம். ஒரு பேப்பர் விளம்பரம், போஸ்டராவது ஒட்டிருக்கலாம். 'ஜிகர்தண்டா' 50-வது நாளை கடந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in