‘சங்கராபரணம்’ திரைப்படத்தை யாராலும் ரீமேக் செய்ய முடியாது: இயக்குநர் கே.விஸ்வநாத் பேச்சு

‘சங்கராபரணம்’ திரைப்படத்தை யாராலும் ரீமேக் செய்ய முடியாது: இயக்குநர் கே.விஸ்வநாத் பேச்சு
Updated on
1 min read

கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘சங்கராபரணம்’ படத்தின் இயக்குநர் கே. விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்ட னர்.

இந்நிகழ்ச்சியில் கே.விஸ்வநாத் பேசியதாவது:

35 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ‘சங்கராபரணம்’ படத்தை மீண்டும் நானே எடுக்க நினைத்தாலும் முடியாது. இறைவனின் அருளால் அப்போது இந்தப்படத்தை இயக்கியதாகவே நம்புகிறேன். இனி யாராலும் அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியாது. அது ஒரு காவியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in