திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள்: யோகி பாபு நெகிழ்ச்சி

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள்: யோகி பாபு நெகிழ்ச்சி
Updated on
1 min read

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யோகி பாபு நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான படம் ‘யோகி’. இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டவர் யோகி பாபு. தற்போது திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமீர் அண்ணன் நடிப்பில், சுப்ரமணியம் சிவா அண்ணன் அவர்கள் இயக்கத்தில் உருவான ‘யோகி’ திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. அமீர் அண்ணன் மற்றும் சுப்ரமணியம் சிவா அண்ணன் இருவருக்கும் என்றும் கடமைப்பட்டு உள்ளேன். நான் வெற்றிகரமாக இயங்கி வர முக்கியமான வேர்களான இயக்குநர்கள் மற்றும் எனது தயாரிப்பாளர்கள் - திரைத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் நண்பர்கள். எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் - எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.

‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்தவர் யோகி பாபு. தற்போது நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகர் என்றால் அது யோகி பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in