Last Updated : 12 Mar, 2019 09:14 PM

 

Published : 12 Mar 2019 09:14 PM
Last Updated : 12 Mar 2019 09:14 PM

ஜோதிகா நடிப்பில் உருவாகும் ராட்சசி?

புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படத்துக்கு 'ராட்சசி' என்று தலைப்பிட ஆலோசனை செய்து வருகிறது படக்குழு.

'செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பூர்ணிமா பாக்யராஜ், சத்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர்.

இதில் அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. அரசுப் பள்ளி மாணவர்களிடையே படிப்பை மேம்படுத்தும் ஆசிரியையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் பொருட்செலவில் பள்ளி மாதிரி அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.

இப்படத்துக்கு 'ராட்சசி' என்று தலைப்பிடலாம் என ஆலோசனை செய்துள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

'ராட்சசி' பணிகள் முடிந்துவிட்டதால், தற்போது 'குலேபகாவலி' இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x