கார்த்தி - ராஷ்மிகா மண்டன்னா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கார்த்தி - ராஷ்மிகா மண்டன்னா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!
Updated on
1 min read

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று (மார்ச் 13) தொடங்கியது.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கைதி’ படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் ஹீரோயின் கிடையாது.

‘கைதி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது. கார்த்தியின் 19-வது படம் இது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா, கன்னட மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். ‘கீதா கோவிந்தம்’ வெற்றியைத் தொடர்ந்து, மறுபடியும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மண்டன்னா.

யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in