ராதாரவி நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? - தாப்ஸி காட்டம்

ராதாரவி நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? - தாப்ஸி காட்டம்
Updated on
1 min read

ராதாரவி நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? என்று தாப்ஸி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராதாரவியின் பேச்சு குறித்து தாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்? இவரென்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்?

இவ்வாறு தாப்ஸி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in