கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பு ‘கைதி’?

கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பு ‘கைதி’?
Updated on
1 min read

கார்த்தி நடித்துவரும் படத்துக்கு ‘கைதி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஒரே இரவில் நடப்பதாக இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தின் நாயகி என யாரும் கிடையாது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டு, அதன்படி படமாக்கி வருகின்றனர். இம்மாத மத்தியில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது.

எனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்துக்கு ‘கைதி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ரெமோ’ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில், அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in