ஜோதிகாவுடன் நடிக்க 3 முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை

ஜோதிகாவுடன் நடிக்க 3 முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க பாரதிராஜா, பார்த்திபன் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் உருவான புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜோதிகா. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து 'குலேபகாவலி' இயக்குநர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு ஜோதிகா படத்தையும் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. புதுமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ள இப்படத்தில் நடிக்க பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பாக்யராஜ். பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பார்த்திபன். குரு - சிஷ்யன் உறவில் இருக்கும் மூவருமே ஒரே படத்தில் நடிக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், யாரெல்லாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in