கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத்சிங்

கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத்சிங்
Updated on
1 min read

கார்த்தியுடன் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 5) இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், ரகுல் ப்ரீத்சிங் பேசியதாவது:

இயக்குநர் என்மேல் நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது. என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் கடுமையாக உழைத்துள்ளார்.

கார்த்தியைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. எங்கள் கூட்டணியில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் இந்தப் படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

கார்த்தியுடன் இணைந்து இன்னும் பல படங்களில் நடிக்கும் அழகான வாய்ப்பு கிடைக்கும்  என்று நம்புகிறேன்.

இவ்வாறு ரகுல் ப்ரீத்சிங் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in