

'பேட்ட' பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள் என்பதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிலளித்துள்ளார்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ் பேட்டியின் கேள்வியும் பதிலும்:
'பேட்ட' படம் ரஜினி ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட படமாக இருக்கும்?
இது ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர்களால் எடுக்கப்பட்ட படம்.
ரஜினியுடனான தருணங்கள் பற்றி?
நிறைய இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டு போய் பேசுவேன். சிறந்த தருணம் என்றால் கதையை கேட்ட 2 நிமிடத்தில் ’இந்த படம் நாம்தான் பண்றோம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அந்த தருணம் என்னால் மறக்க முடியாதது.
'பேட்ட' பற்றி ஒரு வார்த்தை?
’தலைவரிசம்’