தம்பியிடம் கற்றுக் கொண்டது, கடைபிடிப்பது? - இயக்குநர் செல்வராகவன்

தம்பியிடம் கற்றுக் கொண்டது, கடைபிடிப்பது? - இயக்குநர் செல்வராகவன்
Updated on
1 min read

தம்பி தனுஷிடம் கற்றுக்கொண்டு, இன்று வரை கடைபிடிப்பது என்ன என்று இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்ஜிகே’. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

’வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். மேலும், ‘மாரி 2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் தம்பி வெகு வருடங்களுக்கு முன்பு எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், நான் இன்று வரை கடைபிடிப்பது “மற்றவரை ஒரு வேலை செய்யச் சொல்வதை விட நாமே செய்து விடலாம்“ என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட முக்கியமான தனுஷ் படங்களை இயக்கியவர் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in