ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது: சிவகார்த்திகேயன் புகழாஞ்சலி

ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது: சிவகார்த்திகேயன் புகழாஞ்சலி
Updated on
1 min read

ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது என்று கருணாநிதிக்கு சிவகார்த்திகேயன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in