மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மறுப்பது பெரும் அவமதிப்பு: ஆர்.ஜே.பாலாஜி சாடல்

மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மறுப்பது பெரும் அவமதிப்பு: ஆர்.ஜே.பாலாஜி சாடல்
Updated on
1 min read

மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மறுப்பது பெரும் அவமதிப்பாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி சாடியுள்ளார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்காதற்கு ஆர்.ஜே.பாலாஜி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மறுப்பது பெரும் அவமதிப்பாகும். அவர் இந்த மரியாதைக்கு உரித்தானவர். இதை விட அதிகமாகவும். அரசியல் பகையை காட்டும் நேரமல்ல இது. கண்ணியம் காத்து உணர்ச்சிகளுக்கு மதிப்பளியுங்கள்” என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in