மீண்டும் வெளியாகிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’!

மீண்டும் வெளியாகிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’!

Published on

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன் என பலர் நடித்த படம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது. ரதன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை பிவிஆர் சினிமாஸ் ‘செப். 19-ம் தேதி மீண்டும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in