ஏஐ தொழில்நுட்பத்தால் பாடகர்களுக்கு பாதிப்பா? - பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா கருத்து

ஏஐ தொழில்நுட்பத்தால் பாடகர்களுக்கு பாதிப்பா? - பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா கருத்து
Updated on
1 min read

பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். திரையுலகில் 45-வது வருடத்தை எட்டியிருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 17 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கே.எஸ்​.சித்ரா கூறும்​போது, “தொழில்​நுட்​பத்​தால் நன்​மை​கள் இருக்​கின்​றன. ஆனால் அது சில நேரங்​களில் சாதாரண தன்​மை​யைத்​தான் உண்​டாக்​கு​கின்​றன. இப்​போது, ஒரு பாடலை முணு​முணுக்​கத் தெரிந்த ஒரு​வர் கூட அதை டிஜிட்​டலில் மாற்றி நல்ல பாடலை போல, காட்ட முடி​யும். ஆனால் உண்​மை​யான கலை என்​பது கற்​றுக் கொள்​ளும் மனப்​பாங்​கு, தொடர்ந்து பயிற்சி செய்​வது, திறமையை இயல்​பாக வெளிப்​படுத்​து​வ​தில்​தான் இருக்​கிறது.

தொழில்​நுட்​பம் உதவி​யாக இருக்​கலாம், ஆனால் அதன் மூலம் உண்​மை​யான திறமையை மாற்ற முடி​யாது. செயற்கை நுண்​ணறிவு வந்​தா​லும், உண்​மை​யான கலைஞனை அத்​தொழில்​நுட்​பத்​தால் மாற்ற முடி​யாது என்று நம்​பு​கிறேன். ரியாலிட்டி ஷோக்​கள், சரி​யான திறமை​களுக்கு வாய்ப்பு வழங்​கு​கின்​றன.

ஒரு பாடகர் எப்​படி முன்​னேறுகிறார் என்​பதை அங்​குப் பார்க்​கலாம். சரி​யான வழி​காட்​டு​தல் கிடைத்​தால், அவர்​களின் தன்​னம்​பிக்​கை, மேடை இயல்​பு, குரல்​ எல்​லாமே மேம்​படும்​” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in