Last Updated : 05 Jun, 2025 03:38 PM

1  

Published : 05 Jun 2025 03:38 PM
Last Updated : 05 Jun 2025 03:38 PM

டிராப் ஆகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’?

சூர்யா – வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய இருந்த ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ‘வாடிவாசல்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் இப்படம் கைவிடப்பட்டு இருக்கிறது. தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதனைத் தொடர்ந்து சில கதைகளை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படங்களுக்கு இடையே வெற்றிமாறன் படத்தைத் தொடங்கினால், நாட்கள் அதிகமாக தேவைப்படும் என்பதால் இப்போதைக்கு ‘வாடிவாசல்’ வேண்டாம் என்று சூர்யா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் ‘வாடிவாசல்’ கதையை அப்படியே வைத்துவிட்டு, வேறொரு படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். இப்படத்தையும் தாணுவே தயாரிக்கவுள்ளார். இதில் நாயகனாக யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x