Last Updated : 05 Jun, 2025 08:06 AM

1  

Published : 05 Jun 2025 08:06 AM
Last Updated : 05 Jun 2025 08:06 AM

“நெஞ்சை பதற வைக்கிறது பெங்களூரு நெரிசல் சம்பவம்” - கமல்ஹாசன்

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. இது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் மற்றும் ரசிகர்கள் உதவினார். பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x