புதிய படத்துக்காக ரவி மோகனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

புதிய படத்துக்காக ரவி மோகனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா
Updated on
1 min read

ரவி மோகன் நடிப்பில் அடுத்து ’கராத்தே பாபு' என்ற படம் வெளியாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர்படமான இதில் அவர் அரசியல்வாதியாக நடித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கி உள்ளார். இதையடுத்து யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்க இருக்கிறார். இதற்கிடையே, வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றொரு ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in