‘டப்பா ரோல்’ சர்ச்சை: சிம்ரன் விளக்கம்

‘டப்பா ரோல்’ சர்ச்சை: சிம்ரன் விளக்கம்
Updated on
1 min read

‘டப்பா ரோல்’ என்று பேசியது சர்ச்சையானது தொடர்பாக நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிம்ரன் பேசும்போது, “டப்பா ரோல் பண்ணுவதற்கு பதில் ஆன்ட்டி ரோல் எவ்வளவோ மேல்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் ஜோதிகா நடித்த ‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.

சிம்ரன் பேச்சை வைத்து பலரும் ஜோதிகாவைதான் குறிப்பிட்டார் என்று பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். ஆனால், இந்த சர்ச்சைக்கு எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் சிம்ரன். தற்போது அவர் அளித்த பேட்டியில் இந்த சர்ச்சைக் குறித்த கேள்விக்கு, “அதை நானும் பார்த்தேன். அவரவர் ஊகங்களுக்கு எழுதிக் கொண்டார்கள்.

‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் பார்த்துவிட்டேன், அருமையாக இருந்தது. நான் குறிப்பிட்டு பேசிய நபருக்கு, சொன்ன விஷயம் சரியாக போய் சேர்ந்துவிட்டது. அந்த நபர் புரிந்துகொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார். மேலும், அவர் என்னை காயப்படுத்தும் விதத்தில் கூறவில்லை எனவும் குறுஞ்செய்தி அனுப்பினார்.” என்று பேசியிருக்கிறார் சிம்ரன். இதில் ஜோதிகாவை குறிப்பிடவில்லை என்று எங்கேயும் சிம்ரன் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in