கனவில் வருவது நிஜத்தில் நடந்தால்?

கனவில் வருவது நிஜத்தில் நடந்தால்?
Updated on
1 min read

வைகை மற்றும் தீர்க்கதரிசி படங்களை இயக்கிய எல்.ஆர். சுந்தரபாண்டி அடுத்து இயக்கியுள்ள படம், ‘4த் ஃப்ளோர்’. இதில் ஆரி ஆர்ஜுனன் ஹீரோவாக நடிக்கிறார். தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ளார். ஜே.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசையமைத்துள்ள இதன், படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தப் படம் பற்றி இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி கூறும்போது, “இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். நான்காவது புளோரில் நடக்கும் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளோம். கனவில் தெரியும் விஷயம் நிஜத்தில் நடக்கிறது. அதை ஹீரோ எப்படி கையாள்கிறார் என்பது கதை. இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in