சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ல் வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு

சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ல் வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ எனத் தலைப்பிட்டுள்ளது. இதற்கான டீஸரையும் படக்குழு அண்மையில் வெளியிட்டது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த தேதியை ‘ரெட்ரோ’ படக்குழு தேர்வு செய்ததாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in