சிவகார்த்திகேயனின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயனின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு தொடக்கம்!
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில் சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.14) முதல் சென்னையில் தொடங்கி இருக்கிறது.

இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘புறநானூறு’. இதன் முதற்கட்ட பணிகளின் போது சுதா கொங்காரா - சூர்யா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in