செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் - ‘மென்டல் மனதில்’ முதல் தோற்றம் எப்படி?

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் - ‘மென்டல் மனதில்’ முதல் தோற்றம் எப்படி?
Updated on
1 min read

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியானது ‘நானே வருவேன்’ திரைப்படம். இந்தப் படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய செல்வராகவன் படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து இயக்கும் புதிய படத்தின் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிப்பது மட்டுமல்லாமல் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவும் செய்கிறார். இந்தப் படத்தை ‘பாரலல் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொறுத்தவரை பல்வேறு வண்ணங்களுடன் கலர்ஃபுல்லாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் ஒரு பட்டாம்பூச்சியின் படம் இடம்பெற்றிருக்க,கூலிங் க்ளாஸை அணிந்துகொண்டு ஜி.வி.பிரகாஷ் நின்றுகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in