நடிகர் தனுஷ் ரூ.1 கோடி கேட்டு வழக்கு: நயன்​தாரா பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ் ரூ.1 கோடி கேட்டு வழக்கு: நயன்​தாரா பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவண படமாக தயாரித்தது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தனது அனுமதியின்றி அந்த காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சார்பில் ஸ்ரேயாஸ் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், நயன்தாரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் இதுதொடர்பாக பதில் அளிக்கவும், அதற்கு தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in