‘சூர்யா 45’-ல் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்

‘சூர்யா 45’-ல் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்
Updated on
1 min read

‘சூர்யா 45’ படத்திலில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு பணிபுரிந்து வருவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் இப்படத்தில் இருந்து அவர் விலகியது உறுதியானது.

விவகாரத்து தொடர்பான அறிவிப்பு, அதன் தொடர்ச்சியான சலசலப்புக்குப் பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் ஓராண்டு வரை ஓய்வு எடுக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவின. இதற்கு அவரது மகள் கதிஜா மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது, ‘சூர்யா 45’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ‘சூர்யா 45’ படக்குழு இப்போது சாய் அபியங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in