‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ - சுந்தர்.சி முடிவு 

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ - சுந்தர்.சி முடிவு 
Updated on
1 min read

சென்னை: நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ படத்தை தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார்.

‘கேங்கர்ஸ்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை தொடங்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால், அப்படம் தொடங்க சிறு காலமாகிறது. ஆகையால் அதற்கு முன்பாக ‘கலகலப்பு 3’ தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். இதனை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்.

’கலகலப்பு 3’ படத்தை குஷ்பு மற்றும் கண்ணன் ரவி இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். இதனை முடித்துவிட்டு தான் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை தொடங்கவுள்ளார் சுந்தர்.சி.

ஆனால், அதற்கான கதை, திரைக்கதை அனைத்துமே தயாராக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கலகலப்பு’. விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதன் 2-ம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிகில் கல்ராணி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகத்தை உருவாக்க உள்ளார் சுந்தர்.சி. இதிலும் விமல், மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in