நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு!

நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு!
Updated on
1 min read

நடிகை நயன்தாரா, ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தில் நடித்தபோதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டார். இந்தப் படம் வெளியாகி 9 வருடம் ஆனதை ஒட்டி அவர் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வந்த படம் இது. இந்தப் படத்தால் நடிகையாகப் புதிய பாடங்களையும் அனுபவங்களையும், நினைவுகளையும் புதிய உறவையும் பெற்றேன். இதை எனக்கு வழங்கிய விக்னேஷ் சிவனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in