தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணை அக்.19-க்கு தள்ளிவைப்பு

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணை அக்.19-க்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் அக்.19-க்கு தள்ளி வைத்துள்ளது.

நடிகர் தனுஷூம், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.19-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in