முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்

முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்
Updated on
1 min read

முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் திரையுலகில் ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். தயாரிப்பாளராக மட்டுமன்றி ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இன்று (செப்.4) காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் ‘பூக்களை பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழியுது’, ‘இனிய உறவு பூத்தது’, ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘பிள்ளைக்காக’, ‘எங்க அண்ணன் வரட்டும்’, ‘வேலை கிடைச்சிருச்சு’, ‘கிழக்குக்கரை’, ‘கோட்டைவாசல்’, ‘சாமுண்டி’, ‘மறவன்’, ‘பதவி பிரமாணம்’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ஆழ்வார்’, ‘வேல்’ மற்றும் ‘தெய்வத்திருமகள்’ ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

கன்னடத்தில் ‘ரவுடி எம்.எல்.ஏ’ மற்றும் ‘சினேகா’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிகரமாக படங்களை தயாரித்து வெளியிட்டவர் மோகன் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தி, மோகன் நடராஜன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in