‘தி கோட்’ பட இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்ற நடிகர் விஜய்!

‘தி கோட்’ பட இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்ற நடிகர் விஜய்!
Updated on
1 min read

சென்னை: ‘தி கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் சென்றார்.

அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இப்படத்தில் தன்னுடைய பாதி டப்பிங்கை நடிகர் விஜய் பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. எடிட்டிங்கும், டப்பிங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இம்மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in