ரசிகர் மரணம் - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி! 

ரசிகர் மரணம் - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி! 
Updated on
1 min read

சென்னை: உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் “எந்த உதவியானாலும் செய்து தருவேன்” என உறுதியளித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா. 33 வயதான இவர், சென்னை கே கே நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

இந்நிலையில் தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த நடிகர் ஜெயம் ரவி ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in