Published : 13 Apr 2024 04:46 PM
Last Updated : 13 Apr 2024 04:46 PM

“நாளை சம்பவம் உறுதி” - வெங்கட் பிரபு கொடுத்த ‘தி கோட்’ அப்டேட்

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ்தள பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விஜய்யின் ‘தி கோட்’ பட முதல் சிங்கிள் புரோமோ வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியாகலாம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகலாம் என தெரிகிறது. அத்துடன் பாடலுக்கான புரோமோ வீடியோவும் வெளியாக உள்ளதாக கூறப்பபடுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளபக்கத்தில், “நாளை சம்பவம் உறுதி” என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x