தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு காமெடி நடிகர்

தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு காமெடி நடிகர்
Updated on
1 min read

பிரபல தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபு 'தங்கமுட்டை' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை நியூ நார்மல் பிலிம்பேக்டரி சார்பில் இளஞ்செழியன், ஜியோஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோடீஸ்வர ராஜு தயாரிக்கின்றனர். தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என்ற பெயரில் படம் உருவாகிறது. இதை கோபிநாத் நாராயணமூர்த்தி எழுதி, இயக்கி உள்ளார். இவர், இயக்குநர்கள் மிலிந்த்ராவ், ஆர்.கண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இதில், ரோபோ சங்கர், சுர்பி சுக்லா, ராஜேந்திரன், சரண்ராஜ், சுரேகா வாணி, மாறன் உட்பட பலர் நடித்துள்ளனர். முன்னாள் கதாநாயகி கிரண் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீர் டாண்டன் இசை அமைத்துள்ளார்.

படம்பற்றி கோபிநாத் நாராயணமூர்த்தி கூறும்போது, “இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபு, ராசியில்லாத காமெடி திருடனாக நடித்துள்ளார். அவருக்கு தங்க முட்டை போன்றஒன்று கிடைக்கிறது. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துகிறார், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் படம். காமெடி படம் என்றாலும் படத்தில், தேவையான மெசேஜ் உள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் ரோபோ சங்கர் தெலுங்கில் அறிமுகமாகிறார். தெலுங்குக்கு சில நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சம்பூர்ணேஷ் பாபுவுக்கு நடிகர் சஞ்சீவ் டப்பிங் பேசியுள்ளார். சித்தூர் அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in