‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ சீசன் 3 டைட்டிலை வென்றார் கில்மிஷா

‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ சீசன் 3 டைட்டிலை வென்றார் கில்மிஷா
Updated on
1 min read

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட்ஃபைனல் கடந்த 17-ம் தேதிசென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற ஆறு போட்டியாளர்களுக்கு இடையே இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான கில்மிஷா டைட்டிலை வென்றார். அவருக்குச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கோப்பை மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை வழங்கினார்.

முதல் ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்ற ருத்ரேஷ் குமாருக்கு ரூ.3 லட்சமும் இரண்டாவது ரன்னர் அப் சஞ்சனாவுக்கு ரூ.2 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 3-வது இடம் பிடித்த ரிக்ஷிதாவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in