சிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை: புயல் நிவாரணத்துக்கு உதவிக்கரம் நீட்டும் திரையுலகம்!

சிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை: புயல் நிவாரணத்துக்கு உதவிக்கரம் நீட்டும் திரையுலகம்!

Published on

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 13-ம் தேதி ரூ.10 லட்சம் வழங்கினார்.

நடிகர் சூரி நேற்று (டிச.14) ரூ.10 லட்சத்தை உதயநிதியிடம் வழங்கிய நிலையில், இன்று நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார். முன்னதாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செண்பக மூர்த்தி ரூ.5 லட்சம் அடங்கிய காசோலையை உதயநிதியிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in