Published : 12 Dec 2023 10:15 AM
Last Updated : 12 Dec 2023 10:15 AM

கார்த்தி நடிக்கும் படத்துக்காக கேரளாவில் இருந்து வந்த யானை

நடிகர் கார்த்தி, ‘ஜப்பான்’ படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 26-வது படமான இதை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது.

இதற்கிடையே நடிகர் கார்த்தி, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்காக கேரளாவில் இருந்து யானை ஒன்று கொண்டுவரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சிறப்பு அனுமதி பெற்று அழைத்து வரப்பட்ட இந்த யானையை கவனித்துக்கொள்ள, கால்நடை மருத்துவர், யானை பாகன்கள், உதவியாளர்கள் உட்பட 10 பேர் நியமிக்கப்பட்டனர். இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x