உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகும் ‘ஃபயர்’

ரச்சிதா மகாலட்சுமி
ரச்சிதா மகாலட்சுமி
Updated on
1 min read

சென்னை: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக் ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் திரைப்படத்துக்கு ‘ஃபயர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை நடிகரும் தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தமிழகத்தை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் படம் இது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகும் இந்தப் படம் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்கிறார் இயக்குநர். ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி கே இசையமைக்கிறார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் கே ஜீவா வசனம் எழுதுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in