90-களில் நடக்கும் கதையில் சசிகுமார் - ‘கழுகு’ இயக்குநரின் புதிய படம் 

90-களில் நடக்கும் கதையில் சசிகுமார் - ‘கழுகு’ இயக்குநரின் புதிய படம் 
Updated on
1 min read

சென்னை: 90-களில் நடக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த சத்ய சிவா இப்படத்தை இயகுக்கிறார்.

சசிகுமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘கழுகு’ பட இயக்குநர் சத்ய சிவா இயக்கும் புதிய படத்தின் அவர் நடித்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். த்ரில்லர் ட்ராமாவான இப்படம் 90களின் காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகிறது. தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in