

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.
எந்திரனுக்குப் பிறகு, ரஜினியின் இந்தப் படத்தில் இசையமைக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.