தியேட்டரில் காட்சிகள் ரத்தாகும் காலகட்டம் இது: சுந்தர்.சி

தியேட்டரில் காட்சிகள் ரத்தாகும் காலகட்டம் இது: சுந்தர்.சி
Updated on
1 min read

சென்னை: வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பிராமையா உட்பட பலர் நடித்துள்ள படம் 'தலைநகரம் 2'. கடந்த 23ம் தேதி வெளியான இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சுந்தர்.சி பேசியதாவது:

இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என இயக்குநர் துரையிடம் கேட்டேன். அவர் 350-க்கும் அதிகம் என்று சொன்னபோது, பயந்துவிட்டேன். ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் காட்சிகள் கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ‘தலைநகரம் 2’ திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் 4 பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். படம் பார்த்துவிட்டு நிறையப் பேர் பாராட்டினார்கள்" என்றார். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in