‘வாடிவாசல்’ படத்துக்குப் பிறகு விஜய் படப் பணிகள்: வெற்றிமாறன் தகவல்

‘வாடிவாசல்’ படத்துக்குப் பிறகு விஜய் படப் பணிகள்: வெற்றிமாறன் தகவல்

Published on

சென்னை: ’விடுதலை 2’, ‘வாடிவாசல்’ படங்களுக்குப் பிறகு விஜய் படத்துக்கான பணிகள் தொடங்கும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருந்த படம் ‘விடுதலை பாகம் 1’. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “ஒரு படம் பண்ண வேண்டும் என்று நானும் விஜய்யும் வெகுநாட்களாகவே பேசிக் கொண்டிருக்கிறோம். ’விடுதலை 2’, ‘வாடிவாசல்’ படங்களுக்குப் பிறகு அதற்கான வேலைகள் தொடங்கும். கதை விஜய்க்கு பிடித்திருந்தால் நிச்சயமாக நாங்கள் இணைந்து பணிபுரிவோம்” என்று அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in