

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆக் ஷன் அட்வெஞ்சர் பேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் கென்யா காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
அடுத்து அண்டார்டிகாவிலும் இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்திய சினிமா என்று இதைச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் கிச்சா சுதீப் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த சுதீப், ‘பாகுபலி’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.