பும்ராவிடம் மன்னிப்புக் கோரிய ராம் சரண் - பின்னணி என்ன?

பும்ராவிடம் மன்னிப்புக் கோரிய ராம் சரண் - பின்னணி என்ன?
Updated on
1 min read

கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்புக் கோரி இருக்கிறார் நடிகர் ராம் சரண்.

புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இதன் இசை வெளியீட்டு விழா போபாலில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ராம் சரணிடம் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அவை அனைத்துக்கும் ஒற்றை வரியில் பதிலளித்தார் ராம் சரண். அடுத்ததாக முன்னணி பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கேள்வி எழுப்பினார்கள். அப்போது ‘அவர் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர்’ என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் பகிரப்பட்டு கிண்டலுக்கு ஆளானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராம் சரண், “சில சமயங்களில் பெயர்களை மறப்பதில் உண்மையிலேயே மிகவும் மறதியுள்ளவன். இந்தக் குழப்பத்துக்காக பும்ராவிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

அந்தப் பெரும் உற்சாகத்துகும் கூட்டத்துக்கும் மத்தியில் நிகழ்ந்த ஓர் இயல்பான மனிதத் தவறுதான். உங்களை உண்மையிலேயே மதிக்கிறேன். உங்களுடைய ஆட்டத்தின் தீவிர ரசிகன் நான். ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் தொடர்ந்து தடுமாறச் செய்து, ஒவ்வொரு இந்தியனையும் நீங்கள் பெருமை கொள்ளச் செய்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார் ராம் சரண்.

பும்ராவிடம் மன்னிப்புக் கோரிய ராம் சரண் - பின்னணி என்ன?
“இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் கீர்த்தனா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in