நாய்க்கு துலாபாரம் செலுத்திய நடிகை: தெலங்கானாவில் பக்தர்கள் கொந்தளிப்பு

நாய்க்கு துலாபாரம் செலுத்திய நடிகை: தெலங்கானாவில் பக்தர்கள் கொந்தளிப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் உள்ள மேடாரம் பகு​தி​யில் சம்​மக்​கா-​சா​ரக்கா அம்​மன் திரு​விழா வெகு பிரசித்தி பெற்​ற​தாகும். இவ்​விழா வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடை​பெற உள்ளது.

இவ்​விழா​வில் திரளான பக்​தர்​கள் கலந்துகொண்டு நேர்த்தி கடனாக அம்​மனுக்கு வெல்​லத்தை எடைக்கு எடை துலா​ பாரம் செலுத்​து​வது ஐதீகம். இப்​பண்​டிகையை கொண்​டாட தெலங்கானா அரசு 4 நாட்​கள் விடு​முறை அளித்​துள்​ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அம்​மன் விழா​விற்கு "கமிட்டி குர்ரோள்ளு’ ‘ப்ரீ வெட்​டிங் ஷோ’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்​பெற்ற நடிகை யான டீனா ஸ்ரவ்யா, தனது தாயார் மற்​றும் நாய்க்​குட்​டி​யுடன் கோயிலுக்கு சென்​றுள்​ளார்.

அப்​போது அவர், தனது செல்ல நாய்க்​குட்​டிக்கு எடைக்கு எடை வெல்​லத்தை நேர்த்தி கடன் செலுத்​தி​னார். இது தற்​போது விவாதமாகி உள்​ளது. இந்த வீடியோ சமூக வலைத்​தளங்​களில் வைரல் ஆகிய​தால், பக்​தர்​கள் நடிகை​யின் செயலை வன்மையாக கண்டித்து வரு​கின்​றனர்.

இது குறித்து நடிகை டீனா​வின் தாயார் கூறுகை​யில், "ஒவ்​வொரு​வரும் தங்​கள் வீட்​டில் வளர்க்​கும் நாய்க்​குட்​டிகளை தங்​களின் பிள்ளை​களை போல் பாவித்து வளர்த்து வரு​வர். அது​வும் அந்த வீட்​டின் ஒரு உறுப்​பினர்​தான். அதனால் ​தான் அதற்கு சமீபத்​தில் உடல் நலம் சரி​யில்​லாமல் போனது. அதனால் தான் அம்​மனுக்கு எடைக்கு எடை வெல்​லம் கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினோம். இதனை பெரிது படுத்த வேண்​டாம்" என தெரிவித்​துள்​ளார்.

ஆனால், இது கோயிலை​யும், இந்து கலாச்​சா​ரத்​தை​யும் அவமானப்​படுத்​தும் செயல். கண்​டிப்​பாக இதற்கு நடிகை மன்னிப்பு கேட்க வேண்​டும் என பலர் கண்​டனம்​ தெரி​வித்​து வருகின்​றனர்​.

நாய்க்கு துலாபாரம் செலுத்திய நடிகை: தெலங்கானாவில் பக்தர்கள் கொந்தளிப்பு
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: ரூ.1.30 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in